தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மந்த கதியில் நடைபெற்று வரும் சிதம்பரம் ரயில் நிலைய பணியை விரைந்து முடிக்க வேண்டும்: பொதுமக்கள், பயணிகள் எதிர்பார்ப்பு

Advertisement

சிதம்பரம்: சிதம்பரம் ரயில் நிலையத்தை நவீனமயமாக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள், பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயில், தில்லை காளியம்மன் கோயில், அண்ணாமலை பல்கலைக்கழகம், பிச்சாவரம் சுற்றுலா மையம் உள்ளிட்ட ஆன்மீக தலங்களும், கல்வி நிறுவனங்களும், சுற்றுலா மையங்களும் உள்ளது. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ரயில் பயணங்கள் மூலம் சிதம்பரம் நகர பகுதிக்கு வந்து செல்கின்றனர். அதேபோல், கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், அலுவலக பணி உள்ளிட்ட அனைத்திற்கும் பல்வேறு இடங்களில் இருந்து அதிக அளவில் ரயில் பயணங்களில் இங்கு வருகின்றனர்.

இந்நிலையில் சிதம்பரம் ரயில் நிலையத்தை நவீன மயமாக்கும் திட்டத்தின்படி ரயில் நிலையங்களின் முன்புறம் சாலை அமைக்கப்பட்டு, புதிய நுழைவு வாயில் கட்டப்பட்டது. பார்க்கிங் வசதி மற்றும் நடைமேடைகளில் பளிங்கு கற்களால் வழுவழுப்பான தரைதளம் அமைக்கப்பட்டது. இதனால் மழைக்காலங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நடந்து செல்லும்போது வழுக்கி விழும் நிலை உள்ளது. டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள், காத்திருப்பு அரங்குகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட தரைதளம் உள்ளிட்ட பணிகளும் நடைபெறுகிறது.

இந்த பணிகள் அனைத்தும் நீண்ட நாட்களாக மந்த கதியில் நடப்பதால் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் அனைவரும் பாதிப்படைகின்றனர். மேலும் ரயில் நிலைய பிளாட்பார்ம் பகுதிகளில்

ஒருசில இடங்களில் பணிகள் நடைபெறாமல் உள்ளது. அதேபோல் நடைமேடை அருகே நடைபெற்று வரும் பணிகளின் இடையே ஆங்காங்கே சில இடங்களில் பள்ளங்கள் தோண்டி செம்மண் குவியிலாக உள்ளது. இதனால் நடைமேடை பகுதி வழியாக செல்லும் பயணிகள் சிரமப்படுகின்றனர்.

நடைமேடை அருகே நடைபெறும் பணிகளுக்காக தளவாடப் பொருட்கள், இரும்பு கம்பிகள் போன்றவை அப்பகுதி ஓரமாக அதிக அளவில் வைத்துள்ளனர். இதனால் வேகமாக ரயிலில் ஏறுவதற்கு வருபவர்கள் இந்த கம்பிகள் மீது எதிர்பாராத விதமாக மோதி படுகாயமடைகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் பெரும் பாதிப்படைகின்றனர்.

மேலும், வெளிப்புற பகுதி நுழைவாயில் அருகே நடக்கும் பணியும் மந்தமான நிலையிலேயே நடைபெற்று வருகிறது. எனவே ரயில் நிலையத்தில் மந்த கதியில் நடைபெறும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள், பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Related News