தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உடைந்த சத்ரபதி சிவாஜி சிலை: பகிரங்க மன்னிப்பு கேட்டார் பிரதமர் நரேந்திர மோடி!!

Advertisement

குஜராத்: மராட்டியத்தில் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி பகிரங்க மன்னிப்பு கேட்டார். மராட்டியத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் 35 அடி உயர சிலை ஒன்று நிறுவப்பட்டது. கடந்த ஆண்டு சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள கோட்டையில் டிசம்பர் 4ம் தேதி கடற்படை தினத்தில் பிரதமர் மோடியால் இந்த சிலை முறைப்படி திறந்து வைக்கப்பட்டது. இந்த 35 அடி உயர சிலை கடந்த 26ம் தேதி மதியம் 1 மணியளவில் திடீரென உடைந்து விழுந்தது.

பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை 8 மாதங்களில் விழுந்து நொறுங்கியதால் அதிர்ச்சி அடைந்தனர். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதுபற்றி மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த சில நாட்களாக அந்த பகுதியில் கனமழை பெய்ததாகவும், பலத்த காற்று வீசியதாகவும், சிலை உடைந்ததற்கான காரணம் குறித்து நிபுணர்கள் உறுதி செய்வார்கள் என்றும் கூறினார். இந்த நிலையில், சிவாஜி சிலை உடைந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் எனவும், இந்த சம்பவத்திற்காக சத்ரபதி சிவாஜியின் பாதம் பணிந்து 100 முறை மன்னிப்பு கேட்க தயார் எனவும் மராட்டிய மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து, சிவாஜி சிலை உடைந்ததற்கு மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி மராட்டியத்தில் காங்கிரசார் கருப்புக் கொடியுடன் போராட்டம் நடத்தினர். மேலும், மோடி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி மும்பையில் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இந்நிலையில், எதிர்ப்பு வலுத்த நிலையில் மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி சத்ரபதி சிவாஜியிடம் மன்னிப்பு கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; மராட்டியத்தில் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து விழுந்ததற்காக பிரதமர் நரேந்திர மோடி பகிரங்க மன்னிப்பு கேட்டார். சிவாஜி சிலை உடைந்து நொறுங்கியதற்காக, சத்ரபதி சிவாஜியிடமே தான் மன்னிப்பு கோருகிறேன். சத்ரபதி சிவாஜியை கடவுளாக பார்ப்பதாகவும் அவரிடம் மன்னிப்பு கேட்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

Advertisement

Related News