தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் டைடல் பார்க் தொடங்கப்பட்டதால் ஆண்டுக்கு 2 லட்சம் பேருக்கு வேலை: பேரவை தலைவர் அப்பாவு பேச்சு

Advertisement

சென்னை: ஆஸ்திரேலியா, சிட்னி நகரில் நடைபெற்ற 67வது காமன்வெல்த் பாராளுமன்ற மாநாட்டில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை தலைவர் மு.அப்பாவு கலந்துகொண்டு உரையாற்றினார். பின்பு, அங்கிருந்து புறப்பட்டு மெல்போர்ன் நகரை சென்றடைந்தார். நேற்று மெல்போர்ன் நகரில் வசிக்கும் தமிழர்கள் சார்பில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் பேரவைத்தலைவர் அப்பாவு கலந்துகொண்டு, பேசியதாவது: கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் ஆங்கில வழிக் கல்வி பயிற்றுவிக்கும் பள்ளிகளில் தமிழை கற்பிக்காமல் போன வரலாறு உண்டு.

ஆனால், இப்போது கட்டாயமாக தமிழை கற்றுக்கொடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியதன் காரணமாக அங்கெல்லாம் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது. 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான புத்தகங்கள் எவ்வளவு வேண்டும் என்பதை ‘தமிழர் குடும்பம்’ வாயிலாக எங்களுக்குக கடிதம் மூலம் தெரிவித்தால், உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். கல்வியை அனைத்து சாராருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று பெரியார், காமராஜர், அண்ணா, கலைஞர், இன்றைய முதல்வர் வரை அனைவரும் எடுத்த முயற்சியின் காரணமாக, தற்போது இந்தியாவிலேயே பட்டப்படிப்பு படித்தவர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகமாக உள்ளது.

பிரதமர், 2035ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 50 சதவிகிதம் பேர் பட்டம் பயில வேண்டும் என்ற இலக்கோடு புதிய கல்வி கொள்கையை கொண்டு வந்திருக்கிறார். ஆனால், தமிழ்நாட்டில் ஏற்கெனவே 51 விழுக்காடு பட்டம் பெற்றவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவில் 1996ம் ஆண்டுக்கு முன்பு வரை தகவல் தொழில்நுட்ப துறை என்றால் பெங்களூரு மட்டும்தான் என்பது அனைவருக்கும் தெரியும். கலைஞர் முதல்வராகவும், முரசொலி மாறன் மத்திய வர்த்தகத் துறை அமைச்சராகவும் இருந்தபோதுதான், முதன்முதலாக சென்னையில் ‘டைடல் பார்க்’ தொடங்கப்பட்டது. அதன் விளைவாகத்தான், தற்போது ஆண்டிற்கு 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெறுகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Related News