தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னையில் வீடுவீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கீட்டுப் படிவத்தை வழங்கிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணிக்கான கணக்கீட்டுப் படிவம் வழங்கும் பணி 04.11.2025 அன்று முதல் தொடங்கி, பயிற்சி அளிக்கப்பட்ட 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வீடு வீடாகச் சென்று வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கீட்டுப் படிவங்கள் வழங்கும் பணி 04.11.2025 அன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் உள்ள எந்த ஒரு வாக்காளரும் விடுபடாத வகையில் வீடுவீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிக்கான கணக்கீட்டுப் படிவங்களை வழங்கும் பணியில் பயிற்சி அளிக்கப்பட்ட 3,718 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பணியில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கணக்கீட்டுப் படிவத்தை வழங்குவதற்கும், வாக்காளர்கள் படிவங்களை பூர்த்தி செய்யும் வகையில் அவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து, தகுந்த விவரங்களை வழங்குவதற்கும், பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தினை திரும்ப பெறுவதற்கும் சிறப்பான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது.

வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தங்களது வாக்குச்சாவடி பாகத்திற்குட்பட்ட பகுதிகளில் ஏற்கனவே அச்சிடப்பட்ட 2 கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கி அதனை பூர்த்தி செய்வதற்கு ஏற்கனவே அளிக்கப்பட்ட பயிற்சியின்படி உதவி வருகின்றனர்.

பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவத்தினை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையினை மற்றொரு படிவத்தில் வழங்கி வாக்காளரிடம் அதனை வழங்குவார்கள். இப்படிவங்கள் அனைத்தும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களால் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணைய அலைபேசி செயலி (BLO App) மூலமாக பதிவேற்றம் செய்யப்படுகிறது.

Advertisement

Related News