தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணிப்பு: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் மேற்கொள்ளப்பட்டுள்ள வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி துரைப்பாக்கம் முக்கிய அணை கால்வாயில் ரூ.27 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் அணைகளை துணை முதலமைச்சர் ஆய்வு செய்தார். காரப்பாக்கம் சென்னை மெட்ரோ ரயில் பாலப் பகுதியில் உள்ள ஒக்கியம் மடுவில் கரைகளை அகலப்படுத்தி சீரமைக்கும் பணியில் நீர் தடையின்றி செல்வதை நேரில் பார்வையிட்டார்.

Advertisement

துரைப்பாக்கம் கண்ணகிநகரில் உள்ள சென்னை மாநகராட்சி விளையாட்டு திடல் மேம்படுத்தும் பணிகளையும் துணை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். இதனிடையே துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில். சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறினார். ராஜீவ் காந்தி நெடுஞ்சாலை அருகே ஒக்கியம் மடுவின் வலது கரை சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்ததாகவும்.

பருவமழை காலம் முழுவதும் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் துணை முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். சென்னை காரப்பாக்கம், சென்னை மெட்ரோ ரயில் பாலப் பகுதியில் உள்ள ஒக்கியம் மடுவில் மழைநீர் தடையின்றி சீராக வெளியேறும் வகையில் செய்யப்பட்டுள்ள பணிகளைப் பார்வையிட்டு,அதிகாரிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்ததாகவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement