தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் 9 விமானங்கள் திடீர் ரத்து: பயணிகள் கடும் அவதி

Advertisement

மீனம்பாக்கம்: சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் 9 விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, நேற்று காலை 9.40க்கு பெங்களூருக்கும், மாலை 6.10க்கு கவுகாத்திக்கும், இரவு 10.40க்கு கொல்கத்தாவுக்கும் செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மற்றும் இரவு 9.10க்கு டெல்லிக்கு செல்ல வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 4 புறப்பாடு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

இதேபோல் சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு அதிகாலை ஒரு மணிக்கு புனேயில் இருந்தும், காலை 9க்கு பெங்களூருவில் இருந்தும், மாலை 5.35க்கு பெங்களூருவில் இருந்தும், இரவு 10.05க்கு கொல்கத்தாவில் இருந்தும் வரவேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் மற்றும் இரவு 8.20க்கு டெல்லியில் இருந்து வரவேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் ஆகிய 5 வருகை விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 4 புறப்பாடு விமானங்கள், 5 வருகை விமானங்கள் என மொத்தம் 9 பயணிகள் விமானங்கள் திடீரென நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த விமானங்களில் பயணிக்க முன்பதிவு செய்திருந்த பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக நிர்வாக காரணங்கள் என்று கூறி, பயணிகள் விமானங்கள் அடிக்கடி ரத்து செய்யப்படுவது தொடர்ச்சியாக நடக்கிறது. இதனால் சென்னை விமான நிலையத்தில் முன்பதிவு செய்துள்ள பயணிகள், தாங்கள் பயணிக்க வேண்டிய விமானங்கள் அன்றைய தினம் இயக்கப்படுகிறதா? என்று அந்தந்த விமான நிறுவனங்களிடம் கேட்டுவிட்டு, அதன் பின்பே விமான நிலையம் வரவேண்டிய நிலை உள்ளது.

Advertisement

Related News