தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சென்னை விமானநிலைய வளாகத்தில் நாய்களின் எண்ணிக்கை, தொல்லை அதிகரிப்பு: ‘மழுப்பல்’ பதிலளிக்கும் அதிகாரிகள்

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலைய வளாகப் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிகளவிலான தெருநாய்கள் சுற்றி வந்து, சென்னைக்கு வந்து செல்லும் விமானப் பயணிகளுக்கு தொல்லை கொடுத்தன. இப்புகார்களின்பேரில் கடந்தாண்டு சென்னை விமானநிலைய நிர்வாகத்துடன் ப்ளூகிராஸ் மற்றும் விலங்குகள் நல பாதுகாப்பு அமைப்பு ஆகியவை இணைந்து, விமான நிலைய வளாகப் பகுதிகளில் சுற்றி திரிந்து, பயணிகளை அச்சுறுத்தி வந்த சுமார் 40க்கும் மேற்பட்ட நாய்களைப் பிடித்து சென்று அவற்றுக்கு இனவிருத்தி தடை அறுவை சிகிச்சை செய்து, நாய்க்கடி விஷமுறிவு ஊசிகள் செலுத்தி பாதுகாத்தனர். இதனால் சென்னை விமானநிலைய வளாகப் பகுதிகளில் தெருநாய்களின் நடமாட்டம், தொல்லை ஓரளவு குறைந்தது.

Advertisement

சமீபகாலமாக, சென்னை விமானநிலைய உள்நாடு மற்றும் பன்னாட்டு முனையங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் மீண்டும் தெருநாய்களின் எண்ணிக்கை பெருத்து, தொல்லை அதிகரித்துள்ளது. விமானநிலைய வருகை, புறப்பாடு மற்றும் பார்க்கிங் பகுதிகளில் அதிகளவு சுற்றி திரியும் தெருநாய்கள் ஒன்றுடன் மற்றொன்று சண்டையிடுவது, வெளிநாடுகளில் இருந்து பெட்டி படுக்கைகளுடன் வெளியே வரும் விமான பயணிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்துவது போன்றவற்றால் பயணிகளும் ஊழியர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், விமானநிலையத்தில் தெருநாய் தொல்லை பிரச்னையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். சமீபத்தில், விமானநிலையத்தில் சுற்றி திரிந்த தெருநாய்களை ஊழியர்கள் மூலம் பிடித்து, சுமார் 25 கிமீ தொலைவில் விட்டு வந்தோம். ஆனால், நாங்கள் இங்கு வருவதற்கு முன்பாகவே, அந்த தெருநாய்கள் மீண்டும் விமானநிலைய பகுதிக்கு வந்துவிட்டன. இப்பிரச்னைக்கு தீர்வு காண உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று மழுப்பலாக தெரிவித்தனர்.

Advertisement

Related News