தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலை

Advertisement

மதுராந்தகம்: கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகரைச் சேர்ந்தவர் விசித்ரா(28). இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 ஆண் குழந்தைகளுடன் அதே பகுதியில் வசித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த திருமணமாகாத வாலிபர் தியாகராஜன்(34). இந்நிலையில், விசித்ராவுக்கும், தியாகராஜனுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்களின் கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்த இருதரப்பு குடும்பத்தினர் கடுமையாக கண்டித்தனர்.

இந்நிலையில், விசித்ரா, தியாகராஜன் ஆகியோர் வீட்டில் இருந்து வெளியேறி சென்னைக்கு பைக்கில் புறப்பட்டு வந்தனர். திண்டிவனம்-சென்னை தேசிய நெடுஞ்சாலை மதுராந்தகம் அடுத்த பாக்கம் எனும் இடத்தில் வரும்போது இருவருக்கும் மன உறுத்தல் ஏற்பட்டு குடும்பத்தினரை நினைத்து வருந்தினர். தனது குழந்தைகளையும், கணவனையும் விட்டு பிரிந்ததை எண்ணி விசித்ரா வேதனை அடைந்தார். இதையடுத்து, இருவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தனர்.

பின்னர், அப்பகுதியில் உள்ள கோயில் அருகே பைக்கை நிறுத்திவிட்டு இருவரும் விஷம் குடித்து மயங்கினர். தகவல் அறிந்து வந்த மதுராந்தகம் போலீசார் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இருவரையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக கடலூரில் உள்ள இருதரப்பு குடும்பத்தினருக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து விரைந்து வந்த இருதரப்பு குடும்பத்தினர் விருப்பத்தின்பேரில், மேல்சிகிச்சைக்காக பாண்டிச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி விசித்ரா, தியாகராஜன் ஆகியோர் நேற்று மாலை பரிதாபமாக இறந்தனர். இதுகுறித்து, மதுராந்தகம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement

Related News