தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குற்றப்பத்திரிகைகளை ஆன்லைனில் தாக்கல் செய்ய பயிற்சி தரவேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: குற்றப்பத்திரிகைகளை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்ய உரிய பயிற்சி வழங்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த மச்சராஜா, தன் மீது தூத்துக்குடி மாவட்டம், சூரங்குடி போலீசார் கடந்த 2020ல் பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். அரசு தரப்பில், மனுதாரர் மீதான வழக்கின் விசாரணை முடிந்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விளாத்திகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு விட்டது என தெரிவிக்கப்பட்டது.

Advertisement

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் மீதான வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை ஏற்பதில் தாமதம் ஏன் என்று விளாத்திகுளம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, பல்வேறு குறைபாடுகளுடன் இறுதி அறிக்கை இருந்ததால் 3 முறை திருப்பி அனுப்பப்பட்டது என பதிலளிக்கப்பட்டது. தமிழ்நாடு-புதுச்சேரியில் குற்றப்பத்திரிகைகளை ஆன்லைன் வழியாக பதிவேற்றம் செய்வதை ஐகோர்ட் கட்டாயமாக்கி உள்ளது.

இதன்படி இணையதளத்துக்கு பதிலாக நேரடியாக அறிக்கைகளை சமர்ப்பிப்பது விதிமுறைகளுக்கு முரணானது. ஆனால், காவல் நிலையங்களில் போதுமான இணையதள வசதி இல்லாதது உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகளும் இங்கு தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் மற்றும் நீதிமன்ற பணியாளர்களுக்கு போதிய பயிற்சி இல்லாததை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஒரு மாதமாக பயிற்சி வழங்கப்பட்டது.

அதன் பின்பு இணையதளங்களில் பிழையில்லாத இறுதி அறிக்கைகள் தாக்கல் செய்வது அதிகரித்து உள்ளது. எனவே, இறுதி அறிக்கைகளை இணையதளம் வழியாக தாக்கல் செய்வதை முறைப்படுத்துவதற்கு காவல் துறை அதிகாரிகள் மற்றும் நீதித்துறை ஊழியர்களின் ஒருங்கிணைந்த முயற்சிக்கு இந்த நீதிமன்றம் பாராட்டுகளை தெரிவிக்கிறது.

இந்த பயிற்சியின்போது ஏற்படுத்தப்பட்ட தீர்வுகள், நடைமுறைகள் குறித்து அரசுத்துறை தலைவர்கள், ஐகோர்ட் பதிவாளருக்கு உரிய தகவல் அறிக்கைகள் அனுப்பப்படும். அதன்படி அனைத்து மாவட்ட காவல் துறை அதிகாரிகளுக்கும் டிஜிட்டல் முறையிலான குற்றப்பத்திரிகைகளை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்ய உரிய பயிற்சிகளை அளிக்க வேண்டும்.

இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

Advertisement