தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு!
Advertisement
சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட உள் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காணமாக தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம், தென்காசி, தேனி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணிக்குள் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
Advertisement