தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆண்டாள் கோயிலில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு தெய்வங்களுக்கு 108 பட்டு வஸ்திரம் சாற்றும் வைபவம் கோலாகலம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

 ஸ்ரீவில்லிபுத்தூர்:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் உள்ள பெரியபெருமாள் சன்னதியில் கைசிக ஏகாதசியை முன்னிட்டு பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி, ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் ஆகிய தெய்வங்களுக்கு 108 பட்டு வஸ்திரம் சாற்றும் வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விருதுநகர் மாவட்டம்,  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் உள்ள பெரிய பெருமாள் சன்னதியில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கைசிக ஏகாதசி தினத்தில் பெரியபெருமாள், ஸ்ரீதேவி, பூமாதேவி, ஆண்டாள், ரெங்கமன்னார் மற்றும் கருடாழ்வாருக்கு 108 பட்டு வஸ்திரங்கள் சாற்றும் வைபவம் கோலாகலமாக நடைபெறும்.

Advertisement

இதன்படி இந்தாண்டு கைசிக ஏகாதசியை முன்னிட்டு 108 பட்டு வஸ்திரம் சாற்றும் வைபவம் நேற்று இரவு நடைபெற்றது. இதையொட்டி முன்னதாக ஆண்டாள் கோயிலிலிருந்து ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் ஆகியோர் பெரியபெருமாள் சன்னதிக்கு கொண்டு வரப்பட்டனர். அங்குள்ள கோபால விலாசம் மண்டபத்தில் பெரிய பெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவி, ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் மற்றும் ஆழ்வார்களுக்கு நேற்று இரவு 10 மணி முதல் இன்று அதிகாலை 4 மணி வரை 108 பட்டு வஸ்திரங்கள் சாற்றும் வைபவம் நடைபெற்றது. வேதபிரான் பட்டர் சுதர்சன் கைசிக புராணம் வாசித்தார். இதை தொடர்ந்து தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகளும், தீபராதனைகள் நடைபெற்றன.

தெய்வங்கள் ஒன்று சேர்ந்து காட்சியளிப்பதை காணவும், சாமி தரிசனம் செய்யவும் இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் திரண்டு வந்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஆண்டாள் கோவில் நிர்வாக அதிகாரி சக்கரை அம்மாள், கோயில் கண்காணிப்பாளர் அருண் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Advertisement

Related News