சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கஞ்சா சாக்லேட் விற்ற ஒடிசா வாலிபர் கைது
Advertisement
உடனே போலீசார் அந்த வாலிபரை பிடித்து சோதனை செய்த போது, 30 கஞ்சா சாக்லெட் மற்றும் 150 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த கார்த்திக் பிரசாத் மாலிக் (20) என்றும், இவர் ஒடிசா மாநிலத்தில் இருந்து உயர் ரக கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட் ரயில் மூலம் கடத்தி வந்து, சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.அதைதொடர்ந்து போலீசார் கார்த்திக் பிரசாத் மாலிக்கை கைது செய்தனர். அவனிடம் இருந்து 30 கஞ்சா சாக்லேட் மற்றும் 150 கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Advertisement