தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓசூர் அருகே அஞ்செட்டியில் கணக்கெடுப்பு முன்னோட்டம்: டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்து அஞ்செட்டியில் டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான முன்னோட்டம் நடைபெற்று வருகிறது. ஓசூர் அருகே முன்சோதனை மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியானது தொடங்கியது. அதாவது நாடுமுழுவதும் 2027ஆம் ஆண்டு டிஜிட்டல் முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கவுள்ளது. அதற்காக தமிழகத்தில் மொத்தம் மூன்று இடங்களில் முன்சோதனை மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணியானது மேற்கொள்ளப்படுகிறது.

Advertisement

அதன் அடிப்படியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்து அஞ்செட்டியில் மலை கிராம பகுதியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய மக்கள் கணக்கெடுப்பு அலுவலக முகாமை மேற்பார்வையில் முன்சோதனை மக்கள் தொகை கணக்கெடுப்பு அஞ்செட்டி தாலுகாவில் 3, 4, 5, ஆகிய தேதிகளில் அதிகாரிகள் முன்னிலையில் ஆசிரியர்கள், வருவாய் துறையினர், மற்றும் கிராம அலுவலர்களுக்கு எவ்வாறு கையாளுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் நேற்று காலை முதல் 15ஆம் தேதி வரை கிராமங்களில் சூப்பர்வைசர் தங்களுடைய செல்போன்களில் வரைபடம் மூலமாக அந்த பகுதியை தேர்வு செய்வார்கள். அதன் பிறகே அந்த பகுதியில் உள்ள வீடுகள் எவ்வாறு உள்ளது. வீட்டில் என்னென்ன பொருட்கள் உள்ளது என 32 ஆவணங்கள் மூலமா தகவல் சேகரிக்கப்படும்.அது மூலம் சேகரிக்கப்பட்டு பின்புதான் மீண்டும் பதிவேற்றம் செய்யப்படும்.

அந்த பதிவை தொடர்ந்து 31ஆம் தேதி வீடுகளில் மக்கள் தொகையானது கணக்கெடுப்பு நடத்த உள்ளது. இந்த பணியில் 86 கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 17 மேற்பார்வையாளர்கள் ஈடுபடுவார்கள். 2027ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுக்கும் போது எதிர்நோக்கும் சவால்களை முன்சோதனைகள் மூலம் கண்டறிந்து நிவர்த்தி செய்வதற்காகவே கணக்கெடுப்பு பணியானது நடைபெற்று வருகிறது. அஞ்செட்டியில் தாலுகாவில் மொத்தம் 197 கிராமங்களில் மக்கள் தொகை கணக்கெடுப்பு சோதனை நடக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement