தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ராஜேந்திர பாலாஜி வழக்கு; அனுமதி கோரும் கோப்பு ஆளுநர் வசம் உள்ளது. ஆனால் இதுவரை அனுமதி கொடுக்கவில்லை: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிவிப்பு

Advertisement

டெல்லி: ராஜேந்திர பாலாஜி வழக்கில் அனுமதி கோரும் கோப்பு ஆளுநர் வசம் உள்ளது. ஆனால் இதுவரை அனுமதி கொடுக்கவில்லை என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் பால்வளத்துறை அமைச்சராக கே.டி. ராஜேந்திர பாலாஜி இருந்தார். இவர் ஆவின் உள்ளிட்ட அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக 33 பேரிடம் 3 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டது. எதிர்த்து ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் பங்கஜ் மிட்டல், எஸ்.வி.என் பாட்டீல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மேலும் லஞ்ச குற்றச்சாட்டு வழக்கில் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டு விட்டது.ராஜேந்திர பாலாஜி வழக்கு விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பது பற்றி அனுமதி கோரும் கோப்பு ஆளுநர் வசம் உள்ளது. ஆனால் ஆளுநர் இதுவரை அனுமதி கொடுக்கவில்லை. எனவே அனுமதிக்காக தற்போதும் காத்திருக்கிறோம் என தெரிவித்தார். பின்னர், ஆளுநரிடம் ஒப்புதல் பெற என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு தரப்பில், ஆளுநரின் நடவடிக்கை தொடர்பாக எதுவும் விவரிக்க முடியாத சூழலில் உள்ளோம்; பல பிரச்சனைகள் உள்ளன என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் மார்ச் 7ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். அப்போது குறுக்கிட்ட ராஜேந்திர பாலாஜி தரப்பு வழக்கறிஞர், தற்போதைய நிலையில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற ஆணைக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்தார். அதற்கு நீதிபதிபகள், தற்போது மேல்முறையீட்டு வழக்கை விசரணைக்கு எடுக்கவில்லை என தெரிவித்தனர்.

 

Advertisement

Related News