காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாட்டில் தீர்மானம்
இருப்பினும் டெல்டா மாவட்டங்களில் தொழில் பூங்காக்கள் அமைக்க நடவடிக்கைகளும், மறைமுகமான அழிவு திட்டங்களும் செயல்படுத்த இருப்பதாக அறிகிறோம். ஏற்கனவே அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் எந்த விதமான விவசாய விளைநிலங்களுக்கு பாதிப்புகள், அழிவுகள் ஏற்படுத்துகின்ற திட்டங்களை அமல்படுத்த கூடாது. ஒன்றிய, மாநில அரசுகள் அழிவுத்திட்டங்களை கைவிட வேண்டும். கனிம வளங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் சட்டங்களை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும். காவிரி நதிநீர் பிரச்சனையில் 15 ஆண்டுகள் வரை நீர் பங்கீடு குறித்தான மேல்முறையீடு செய்ய முடியாது என்கிற தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில், காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட வேண்டும்.
கரும்பு உற்பத்திக்கான கட்டுப்படியான விலையாக டன் ஒன்றுக்கு 5000 ரூபாய் அறிவிக்க வேண்டும். தனியார் கொள்முதல் செய்யலாம் என்ற அனுமதியை தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் அமல்படுத்த கூடாது. பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு 5 ரூபாய் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 2 நாட்கள் நடைபெற்ற மாநாடு நேற்று நிறைவடைந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இரண்டு நாள் நடைபெற்ற மாநாட்டினை நிறைவு செய்து பேசினார்.