தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மரவள்ளிக்கிழங்கு தொடர் விலை வீழ்ச்சி: ஏற்றுமதியை ஊக்குவிக்க கோரிக்கை

Advertisement

ஈரோடு: மரவள்ளிக்கிழங்கின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருவதால், ஏற்றுமதியை ஊக்குவிக்க விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கொடுமுடி, சிவகிரி, அந்தியூர், மலைப்பகுதிகளான கடம்பூர், பர்கூர், தாளவாடி மற்றும் திருப்பூர், நாமக்கல், சேலம், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் மரவள்ளிக்கிழங்கு அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மரவள்ளிக்கிழங்கு விலை கடுமையான சரிவை சந்தித்து வருவதால் மரவள்ளி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதில், கடந்த ஆகஸ்ட் மாதம் மரவள்ளிக்கிழங்கு டன்னுக்கு ரூ.3 ஆயிரம் விலை வீழ்ச்சி அடைந்து ரூ.7,500க்கு விற்பனையானது. தற்போது, மேலும், ரூ.1,000ம் சரிவடைந்து, தற்போது, ஒரு டன் ரூ.6,500க்கு கொள்முதல் செய்வதால் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாராகும் ஜவ்வரிசி 90 கிலோ மூட்டை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தற்போது ரூ.300 குறைந்து ரூ.3,700க்கும், ஸ்டார்ச் மாவு 90 கிலோ ரூ.3 ஆயிரம் வரை விற்பனையாகிறது. மரவள்ளிக்கிழங்கின் விலை வீழ்ச்சியை கட்டுப்படுத்திட தமிழ்நாடு அரசு ஏற்றுமதியை ஊக்கப்படுத்திட வேண்டும். அதேபோல், மரவள்ளிக்கிழங்கு சார்ந்த பொருட்களை இறக்குமதிக்கு தடை செய்ய வேண்டும் என ஈரோடு மாவட்டத்தில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Advertisement

Related News