தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வெயிலின் தாக்கம் அதிகரித்தும் கிராமப்புறங்களில் மரவள்ளி கிழக்கு சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்

Advertisement

பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்று வட்டார பகுதிகளில் தென்னைக்கு அடுத்தப்படியாக மானாவாரி சாகுபடி உள்ளது. தக்காளி, பூசணி, வெண்டை, கத்தரி, மிளகாய், நிலக்கடலை, மக்காசோளம் உள்ளிட்டவை அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இதில், சுற்று வட்டார கிராமங்களில் பல விவசாயிகள் மரவள்ளி கிழங்கு சாகுபடியிலும் தீவிரம் காட்டுகின்றனர். தற்போது, மழை இல்லாமல் இருப்பதால் வெயிலின் தாக்கத்துக்கு தக்காளி, பூசணி உள்ளிட்ட காய்கறிகள் செடியிலேயே அழுகி விடுகின்றன. ஆனால், குறைவான தண்ணீர் இருந்தாலும் செம்மண் போன்ற மணற்பாங்கான இடத்தில் மரவள்ளி கிழங்கு செழித்தோங்குகிறது. இதனாலேயே, விவசாயிகள் பலர் தங்கள் விளைநிலங்களில் மரவள்ளி சாகுபடியை தற்போது அதிகரித்துள்ளனர்.

குறிப்பாக, ஆத்துப்பொள்ளாச்சி, அம்பராம்பாளையம், போடிபாளையம், ஜமீன்ஊத்துக்குளி, கஞ்சம்பட்டி, வடக்கிபாளையம், முத்தூர், ராமநாதபுரம், தாத்தூர், தாளக்கரை, அங்கலக்குறிச்சி உள்ளிட்ட பல கிராமங்களில் மரவள்ளி கிழங்கு சாகுபடி அதிகமாக உள்ளது.மழைப்பொழிவு இல்லாமல் இருந்தாலும் வெயிலுக்கு தாக்குபிடித்தவாறு மரவள்ளி கிழங்கு நன்கு விளைந்துள்ளது. பல இடங்களில் சாகுபடி செய்யப்பட்டவை, இன்னும் ஒரு சில வாரங்களில் அறுவடைக்கு தயாராகி விடும் நிலையில் உள்ளது. கடந்த ஆண்டு இரு பருவமழை அடுத்தடுத்து பெய்ததால் பல ஏக்கரில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்யப்பட்டுள்ளதாக என விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement