சமூக வலைதளங்களில் ஆபாச கமெண்ட் நடிகை ஹனிரோஸ் அளித்த புகாரில் நகைக்கடை அதிபர் மீது வழக்கு
Advertisement
இந்த நிலை தொடர்ந்தால் அவர் மீது நான் போலீசில் புகார் செய்வேன் என்று நடிகை ஹனிரோஸ் குறிப்பிட்டிருந்தார். இதைத் தொடர்ந்து அந்த நகைக்கடை அதிபர் யார் என்ற பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் நடிகை ஹனிரோசிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அந்த நபர் கேரளாவைச் சேர்ந்த பிரபல நகைக்கடை அதிபரான பாபி செம்மணூர் என தெரியவந்துள்ளது. அவருக்கு எதிராக நடிகை ஹனிரோஸ் நேற்று எர்ணாகுளம்போலீசில் புகார் செய்துள்ளார். இதன் பேரில் பாபி செம்மணூர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
Advertisement