தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்கு

Advertisement

கேரளா: கேரளாவில் பூரம் விழாவின்போது ஆம்புலன்ஸை பயன்படுத்தியதாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் அளித்த புகாரின் பேரில் திரிச்சூர் கிழக்கு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆம்புலன்ஸை பயன்படுத்தியதாக சுரேஷ் கோபி விளக்கம் அளித்திருந்தார்.

கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற பூரம் திருவிழா பகுதிக்குள் ஆம்புலன்சில் சென்ற விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது கேரள போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சி.பி.ஐ. தலைவர் அளித்த புகாரின் பேரில் திருச்சூர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

முன்னதாக திருச்சூர் பூரம் நிகழ்வின் போது நடிகர் சுரேஷ் கோபி ஆம்புலன்சை தவறாக பயன்படுத்தியதாக எப்.ஐ.ஆரில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இது தொடர்பான அந்த புகாரில் அனைத்து ஆம்புலன்ஸ்களுக்கான வழித்தடங்களும் முன்னரே தீர்மானிக்கப்பட்டதாகவும், அமைச்சர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வருவதற்கு தடை விதிக்கப்பட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மந்திரி சுரேஷ் கோபி இந்த விதிமுறைகளை மீறி, அஜாக்கிரதையாக வாகனத்தை ஓட்டி, பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விவகாரத்தில் முதலில், சுரேஷ் கோபி ஆம்புலன்சில் ஏறவில்லை என்று கூறினார், ஆனால் பின்னர் அதில் பயணம் செய்ததாக ஒப்புக்கொண்டார். கால் அசவுகரியம் காரணமாக ஆம்புலன்சை பயன்படுத்தியதாக அவர் விளக்கம் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement