தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கார் சீட்டின் அடியில் ரகசிய அறை 136 கிலோ கஞ்சா கடத்தி வந்த 4 பேர் கைது

Advertisement

தஞ்சை: தஞ்சையில் ஒரே பதிவெண் கொண்ட 2 கார்களில் 136 கிலோ கஞ்சா கடத்தி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். தஞ்சை பள்ளியக்ரஹாரம் கூடலூர் ரோட்டில் சிலர் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக வந்த தகவலின் பேரில் மருத்துவக்கல்லூரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையிலான போலீசார் நேற்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, ஒரே பதிவெண் கொண்ட 2 கார்கள் அந்த பகுதியில் நின்றதால் சந்தேகமடைந்த போலீசார், கார்களில் இருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். மேலும கார்களிலும் சோதனையிட்டனர்.

இதில் கார்களில் பின் சீட்டுக்கு அடியில் ரகசிய அறை அமைத்து அதில் கஞ்சாவை பதுக்கி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிலிருந்த 65 பொட்டலங்கள் கொண்ட 136 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். இதன் மதிப்பு சுமார் ரூ.25 லட்சம். மேலும் விசாரணையில், அவர்கள் மதுரையை சேர்ந்த ரவிச்சந்திரன்(44), சுப்பிரமணி(45), புதுக்கோட்டையை சேர்ந்த பெர்னான்டோ(30), ஐயப்பன்(29) என்பதும், இவர்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்ய ஆந்திராவிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ஒரே பதிவெண் கொண்ட 2 கார்கள், 5 செல்போன்கள், கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர். மேலும் கஞ்சாவை ஆந்திராவில் யாரிடமிருந்து வாங்கி வந்தனர், மேலும் இதில் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என விசாரணை நடத்தினர். பின்னர் 4 பேரையும் தஞ்சை நீதிபதி முன் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

Advertisement