தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டர் கொடுத்ததால் சாலையில் கார் தாறுமாறாக ஓடியதில் பெண் படுகாயம்; வாகனங்கள் சேதம்: சூளைமேட்டில் பரபரப்பு

Advertisement

அண்ணாநகர்: சூளைமேடு பகுதியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி பெண் படுகாயம் அடைந்ததுடன் ஏராளமான வாகனங்கள் சேதம் அடைந்தன. பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்சிலேட்டர் கொடுத்ததால் சினிமா காட்சி போல் சம்பவம் நடந்துள்ளது. சென்னை சூளைமேடு அபித் நகர் வழியாக நேற்று மாலை படுவேகமாக சென்ற ஒரு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியதுடன் அந்த வழியாக சென்ற பெண் மீது மோதி அவரை தரதரவென இழுத்துச் சென்றது. இது பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள் கூச்சல் போட்டபோதும் நிற்காமல் சென்ற கார், முன்னாடி சென்ற பைக் மீது மோதிவிட்டு சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த 4 பைக்குகள் மீது மோதி நொறுக்கியதுடன் அங்குள்ள மெக்கானிக் கடையில் புகுந்து கார் நின்றுவிட்டது.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வந்து காயம் அடைந்த பெண் உட்பட 2 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிவு விசாரித்தனர். இதில், விபத்து ஏற்படுத்தியவர் கொளத்தூர் பகுதியை சேர்ந்த செந்தில் (49) என்பதும் நேற்று சூளைமேடு பகுதியில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு வந்துவிட்டு அவரது காரை எடுத்துகொண்டு சென்றபோது மாடு குறுக்கே வந்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் பதற்றத்தில் பிரேக் பிடிப்பதற்கு பதிலாக ஆக்ஸிலேட்டரை அழுத்தியதால் இந்த விபத்து நடந்துள்ளது என்று தெரிகிறது. இதையடுத்து செந்தில் மீது வழக்குபதிவு செய்து காரை பறிமுதல் செய்தனர். இந்த விபத்து காட்சிகள் அனைத்தும் சமூவலை தள பக்கத்தில் வெளியாகி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News