தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வாணியம்பாடி அருகே வடகிழக்கு பருவமழையையொட்டி கால்வாய் தூர்வாரும் பணி

Advertisement

வாணியம்பாடி: வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழையையொட்டி முன்னெச்சரிக்கை கால்வாய் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வரும் நிலையில், திருப்பத்தூர் கலெக்டர் தர்ப்பகராஜ் உத்தரவின் பேரில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை கண்காணிக்க தனித்தனியே குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக வாணியம்பாடி அடுத்த உதயந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட 15 வார்டுகளில் பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர் கொள்ளும் வகையில் ‌ பேரூர் மன்ற தலைவர் ஆ.பூசாராணி மற்றும் பேரூர் செயல் அலுவலர் நாகராஜன் ஆகியோர் மேற்பார்வையில் பருவமழை எதிர் கொள்ள தேவையான மண் மூட்டைகள், கடப்பாறைகள், மண்வெட்டி, மரம் அறுக்கும் கருவி, பொக்லைன், தண்ணீர் இறைக்கும் பம்பு செட்டுகள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில், நேற்று பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள், 15 வார்டுகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள கழிவுநீர் செல்லும் கால்வாய்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் உள்ள மழைநீர் செல்லும் கால்வாய்கள், கல்வெட்டுகள் ஆகியவற்றை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அகலமாகவும், ஆழப்படுத்தியும் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும் வீடுகளில் அருகாமையில் உள்ள பழைய டயர்கள், பயன் பாட்டில் இல்லாத உரல்கள், உடைந்த பக்கெட், பானைகள், தேங்காய் சிரட்டைகள் போன்றவற்றை அப்புறப்படுத்தி கழிவுநீர் கால்வாய்களில் கொசு ஒழிப்பு தெளிப்பு மருந்து அடிக்கப்பட்டது. அதேபோல் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் விநியோகிக்கப்படும் குடிநீரை குளோரினேஷன் பரிசோதனை செய்யப்பட்டது.

 

Advertisement