தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதால் தகராறு செங்கல் சூளை தொழிலாளி சரமாரி வெட்டிக் கொலை: பாலிடெக்னிக் மாணவர் கைது

Advertisement

நெல்லை: கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதால் ஏற்பட்ட தகராறில், செங்கல் சூளை தொழிலாளி அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் பாலிடெக்னிக் மாணவரை கைது செய்தனர்.

நெல்லை, வள்ளியூரை அடுத்த பழவூர், செட்டிகுளத்தை சேர்ந்தவர் சந்தனகுமார் (35). செங்கல் சூளை தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த பாலிடெக்னிக் மாணவரான ரெஜிமென்ட் (19) என்பவரிடமிருந்து ரூ.25 ஆயிரம் கடன் வாங்கியதாகக் கூறப்படுகிறது. பணத்தை வாங்குவதற்காக நேற்று முன்தினம் காலை சந்தனகுமாரின் வீட்டிற்கு ரெஜிமென்ட் சென்றுள்ளார்.

அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி சந்தனகுமார் அரிவாளால் ரெஜிமென்டை வெட்ட முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரெஜிமென்ட், சந்தனகுமாரின் கையில் இருந்து அரிவாளை பறித்து அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த சந்தனகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பழவூர் போலீசார், பாலிடெக்னிக் மாணவர் ரெஜிமென்டை கைது செய்தனர்.

 

Advertisement

Related News