எல்லை போராட்ட தியாகிகள் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளை காப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்
சென்னை: எல்லை போராட்ட தியாகிகள் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளை காப்போம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எல்லை போராட்ட தியாகிகள் நாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: இன்று நாம் வாழும் தமிழ்நாட்டின் பல பகுதிகளை நமக்காக போராடி பெற்றுத் தந்த குமரித் தந்தை மார்ஷல் நேசமணி, சிலம்புச் செல்வர் ம.பொ.சி. முதலிய எண்ணற்ற போராளிகளுக்கு எல்லை போராட்ட தியாகிகள் நாளில் என் வீரவணக்கத்தை செலுத்துகிறேன்.
Advertisement
போராடாவிட்டால் நமக்குச் சொந்தமான நிலம் மட்டுமல்ல, வாக்குரிமையே கூட பறிபோய்விடும் என அப்போதே காட்டிச் சென்றுள்ள நம் தலைவர்கள் வழியில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காப்போம்! தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement