தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

20 சதவீதம் போனஸ் வழங்கக்கோரி என்எல்சியில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள் விடிய விடிய போராட்டம்

Advertisement

கடலூர்: நெய்வேலியில் என்எல்சியில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்கள், தங்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கக்கோரி விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெய்வேலியில் என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனம் உள்ளது. அங்கு திறந்தவெளி 3 சுரங்கங்கள் மூலம் பழுப்பு நிலக்கரி வெட்டி எடுக்கப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அங்கு 8000 நிரந்தர பணியாளர்களுக்கும், 10,000 ஒப்பந்த பணியாளர்களுக்கும் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் என்எல்சி நிர்வாகம் அந்நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும், நிரந்தர பணியாளர்களுக்கும் அதிகப்படியான போனஸ் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கும் 8.33 சதவீதம் மட்டுமே போனஸ் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் தங்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கக்கோரி போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று மாலை என்எல்சி சுரங்க நிர்வாக அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர் ஒப்பந்த பணியாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

தங்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கக்கோரி நேற்று இரவு முதல் ஒப்பந்த பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருவதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியுள்ளது. தங்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என ஒப்பந்த பணியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Related News