தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாலிவுட் பாடலுக்கு குத்தாட்டம் போட்டபோது மாரடைப்பால் எம்பிஏ பட்டதாரி பெண் மரணம்

Advertisement

போபால்: பாலிவுட் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட எம்பிஏ பட்டதாரி பெண் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் விதிஷா பகுதியில் அமைந்துள்ள ரிசார்ட்டில் திருமண விழா நடைபெற்றது. அந்த விழாவில் இந்தூரில் வசிக்கும் பரினிதா ஜெயின் (23) என்ற இளம்பெண்ணும் கலந்து கொண்டார். இசை கச்சேரி நடந்து கொண்டிருந்த போது, பரினிதா ஜெயின் உள்ளிட்ட சில பெண்கள் மேடையில் ஆட்டம் போட்டனர்.

‘லெஹ்ரா கே பால்கா கே’ என்ற பாலிவுட் பாடலுக்கு பெண்கள் நடனமாடிய போது பரினிதா ஜெயினும் குத்தாட்டம் போட்டார். திடீரென அவர் மேடையில் சரிந்தார். இந்த விழாவில் கலந்து கொண்ட மருத்துவர் ஒருவர், அவருக்கு சிபிஆர் (கார்டியோபல்மோனரி ரெசஸிடேஷன்) முதலுதவி கொடுக்க முயன்றனர்; ஆனால் பலனளிக்கவில்லை. உடனடியாக பரனிதாவை மீட்டு அப்பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பரனிதா ெஜயின் இறந்துவிட்டார். எம்பிஏ பட்டதாரியான பரினிதா, இந்தூரின் தெற்கு டுகோகஞ்சில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.

அவரது இளைய சகோதரர்களில் ஒருவர் தனது 12 வயதில் மாரடைப்பால் இறந்தார். தற்போது பரினிதாவும் மாரடைப்பால் விழா மேடையில் சரிந்து விழுந்து இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேசத்தில் ஏற்கனவே கடந்த ஆண்டு அக்டோபரில், அகர்-மால்வா மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 15 வயது சிறுவன் மாரடைப்பால் இறந்தார். இதேபோல், இந்தூரில் யோகா நிகழ்ச்சியின் போது மேடையில் நடனமாடிய 73 வயது முதியவர் மாரடைப்பால் சம்பவ இடத்திலேயே இறந்தார். மாரடைப்பால் திடீரென இறப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Related News