தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பூமிதான வாரியத் தலைவர் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் வாரியக் கூட்டம் நடைபெற்றது

Advertisement

பூமிதான வாரியக் கூட்டம் 10.06.2025 அன்று சென்னை சேப்பாக்கம் ஐந்தாம் தளத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூட்ட அரங்கில் நடைபெற்றது. பூமிதான வாரியத் தலைவர் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் வாரியக் கூட்டம் நடைபெற்றது. இவ்வாரியக் கூட்டத்தில் மொத்தம் 58 கூட்டப் பொருள்கள் விவாதத்திற்கு வைக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதன்படி திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 1755 பயனாளிகளுக்கு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடுகள் ஒதுக்கப்பட்டு வீட்டுமனை இல்லாதவர்களுக்கு வீட்டுமனை பயன்பாட்டிற்காக 35.01 ஏக்கர் விஸ்தீரண பூமிதான நிலங்களில் வீட்டுமனை விநியோகப் பத்திரம் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 3 பயனாளிகளுக்கு விவசாய பயன்பாட்டிற்காக 3.00 ஏக்கர் விஸ்தீரண பூமிதான நிலங்களில் மறுவிநியோகப் பத்திரம் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பூமிதான சட்டப்பிரிவு 19(1) -இன்படி 141 பயனாளிகளுக்கு வீட்டுமனைக்காக 6.36 ஏக்கர் பூமிதான நிலம் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 4 இனங்களுக்கு அரசு பொது நோக்கத்திற்காக 4.71 ஏக்கர் விஸ்தீரண பூமிதான நிலம் வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த கூட்டத்தில் வாரிய அலுவல் சார்ந்த உறுப்பினர்களான அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பாக கூடுதல் செயலாளர் திருமதி. வெ.பத்மா, நிலச்சீர்திருத்த ஆணையர் த.ந.ஹரிஹரன், இ.ஆ.ப., நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குநர் மற்றும் நிலச்சீர்திருத்த இயக்குநர் / உறுப்பினர் செயலர்/ தமிழ்நாடு பூமிதான வாரியம் (மு.கூ.பொ) ப.மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப. மற்றும் இதர அலுவல் சார்ந்த உறுப்பினர்களான இயக்குநர் வேளாண்மைத்துறை சார்பாக திருமதி. K.சோபியா சத்தியவதி ஆகியோர் கலந்து கொண்டார்கள். மேலும், இவ்வாரியத்தின் அலுவல்சாரா உறுப்பினர்களான திருவாளர்கள் கே.ஆர்.கண்ணன் மற்றும் அ.உறுமத்தான் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

 

Advertisement

Related News