காரப்பாக்கம் பகுதியில் குளத்தை ஆக்கிரமித்து மதில்சுவர் பாஜ மாநில நிர்வாகி மீது புகார்: அதிகாரிகள் விசாரணை
இதனையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளதால், அரசுக்கு சொந்தமான நிலத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து விற்று வருகின்றனர். சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட காரப்பாக்கம் பகுதியில் சர்வே எண்:89ல் உள்ள பெரியகேணி குளத்தின் ஒரு பகுதியை 198வது வார்டு மாமன்ற உறுப்பினர் சுந்தரம் ஆக்கிரமிப்பு செய்து, சுற்றுச்சுவர் அமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். அது மட்டுமல்லாமல் இக்குளத்தின் ஒரு பகுதியை தனியார் நிலத்திற்கு செல்வதற்காக ஆக்கிரமிப்பு செய்து சாலை அமைத்து கொடுத்துள்ளனர். மேலும், கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி இதேபோன்று குளத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டிடம் கட்ட முயற்சித்தபோது, நாங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,’’ என்றனர்.