Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

பாஜவுடன் கூட்டணி இல்லையென்று எடப்பாடி வேஷம்: அதிமுகவை காப்பாற்ற திமுகவுக்கு வாக்களியுங்க; ஈஸ்வரன் ‘ஒரே போடு’

இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து ஈரோட்டில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கொமதேக பொதுச்செயலாளரும், எம்எல்ஏவுமான ஈ.ஆர்.ஈஸ்வரன் பேசியதாவது: பாஜ கட்சியை நாங்கள் எல்லாம் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், பாஜவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்று அதிமுக போராடிக்கொண்டிருக்கிறது. பாஜவுக்கு ஓட்டு போட்டாலும், அதிமுகவுக்கு ஓட்டு போட்டாலும் அது மோடிக்கு போடுகிற ஒட்டு என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எடப்பாடி பழனிசாமி பாஜவை முழுமையாக எதிர்த்தாரா? என்றால் இல்லை. காரணம் தேர்தலுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி மோடியைத்தான் ஆதரிக்க போகிறார். எந்த சந்தேகமும் கிடையாது.

எனவே, எடப்பாடி பழனிசாமி மோடியை ஆதரிக்கக்கூடியவர். உங்களை ஏமாற்றக்கூடியவர். நடிக்கிறார். கூட்டணி இல்லாததுபோல வேஷம் போடுகிறார். அந்த வேஷத்தை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். சொந்த கட்சி தொண்டர்களுக்கே எடப்பாடி பழனிசாமி துரோகம் செய்திருக்கிறார். அதுதான் உண்மை. தேர்தலுக்கு பின்னர் மோடியை எடப்பாடி பழனிச்சாமி ஆதரித்தால் 2026ல் அதிமுக இருக்காது. அதிமுக காலி. அதிமுக தொண்டர்களாகிய நீங்கள் வளர்த்த அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்றால், நீங்கள் மோடிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். மோடிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றால் அதிமுக தொண்டர்கள் திராவிட கட்சியான திமுகவுக்கே உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.