தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாஜகவுக்கு பாதகமான சூழல்கள் இருப்பதால் இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியை சந்திக்கும்!: பிரபல முதலீட்டாளர் பரபரப்பு பேட்டி

Advertisement

மும்பை: தேர்தலில் பாஜகவுக்கு பாதகமான சூழல்கள் இருப்பதால் இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சியை சந்திக்கும் என்று பிரபல முதலீட்டாளர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் ஜூன் 1ம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. அன்றைய தினமே வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாக உள்ளன. அதனால் அன்றிலிருந்தே தொழில் துறையினர், வர்த்தகர்கள், முதலீட்டாளர்களின் எதிர்ப்பார்ப்புகளும் அதிகரிக்க தொடங்கிவிடும். மிகவும் எதிர்பார்க்கப்படும் தேர்தல் முடிவுகள் ஜூன் 4ம் தேதி ெவளியாக உள்ளதால், தேர்தல் முடிவுகள் இந்திய பங்குச் சந்தையில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பிரபல முதலீட்டாளரும், எழுத்தாளருமான ருசிர் சர்மா தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு 250க்கும் குறைவான இடங்கள் கிடைத்தால், இந்திய பங்குச் சந்தையில் குறிப்பிடத்தக்க பாதகமான சூழல்கள் ஏற்படும். கிட்டத்தட்ட 10 முதல் 20 சதவீதம் அளவிற்கு சரிவைச் சந்திக்கும்.

உலகின் மிக விலை உயர்ந்த பங்குச் சந்தையாக இந்தியா இருந்தாலும், தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்ளே வருவதில் தயக்கம் காட்டுகின்றனர். அன்னிய நேரடி முதலீட்டிற்கான சூழலை, இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, பணவீக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்தி இருந்தாலும், 8 முதல் 9 சதவீதமாக உயர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். பீகார், கர்நாடகா, மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு சாதகமான சூழல்கள் இல்லை. அங்குள்ள கூட்டணி கட்சிகள் மோசமாக செயல்படுகின்றன. மகாராஷ்டிராவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் மகா விகாஸ் அகாடி கூட்டணி கட்சிகள் சம பலத்துடன் உள்ளன. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவுக்கு சாதகமான சூழல்கள் உள்ளது. ஆனால் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு சாதகமான சூழல் இல்லை. கர்நாடகாவில் பாஜக 25 இடங்களிலும், ஜேடிஎஸ் 3 இடங்களிலும் போட்டியிடுகிறது. 2019ல் பாஜகவுக்கு 25 இடங்கள் கிடைத்தன. ஆனால் இம்முறை 15 முதல் 18 தொகுதி வரை கிடைக்கும்’ என்றார்.

Advertisement

Related News