தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாஜ தேர்தல் பொறுப்பாளர் அன்புமணியுடன் சந்திப்பு: கூட்டணி குறித்து பேச்சு

சென்னை: பாமகவில் தந்தை, மகன் மோதலுக்குப் பின்னர் அன்புமணியுடன் பாஜ தேர்தல் பொறுப்பாளர் நேற்று இரவு சந்தித்துப் பேசினார். பாஜ கூட்டணியில் பாமக இருந்து வந்தது. தொடர்ச்சியாக 3 தேர்தல்களில் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். கடந்த மக்களவை தேர்தலில் பாஜ தலைமையில் ஒரு மணியும், அதிமுக தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிட்டன. அதில் பாஜ அணியில் பாமக போட்டியிட்டது.

Advertisement

இந்தநிலையில், கடந்த சில மாதங்களாக பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது. இவ்வாறு தந்தை, மகன் மோதல் எழுந்துள்ள நிலையில், அக்கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து பாஜ மற்றும் அதிமுக தலைவர்கள் அமைதி காத்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு பனையூரில் உள்ள அன்புமணியின் வீட்டிற்கு பாஜ தேர்தல் பொறுப்பாளர் பைஜெயந்த் பாண்டா சந்தித்துப் பேசினார்.

அப்போது தேர்தல் கூட்டணி குறித்தும், ராமதாசுடன் உள்ள மோதல் குறித்தும் அவர்கள் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் அமித்ஷா, உத்தரவின்பேரிலேயே அவர் சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த வாரம், அவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தார். தற்போது அன்புமணியுடன் ஆலோசனை நடத்தினார். இதனால் பாமகவை உடனடியாக கூட்டணியில் சேர்ப்பது குறித்து அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

Advertisement