தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாஜவுக்கு தேர்தல் ஜூரம் பிரதமர் மோடி அடுத்த மாதம் மீண்டும் தமிழகம் வருகை: சிதம்பரம், திருவண்ணாமலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

Advertisement

சென்னை: தமிழகத்துக்கு அடுத்த மாதம் 2 நாள் பயணமாக பிரதமர் மோடி மீண்டும் வருகிறார். சிதம்பரம் மற்றும் திருவண்ணாமலையில் நடைபெறும் கூட்டங்களில் அவர் பங்கேற்கிறார். தேர்தல் பணிகளில் பாஜ தீவிரமாக இறங்கியுள்ளது. எடப்பாடி பழனிசாமியை டெல்லிக்கு வரவழைத்து கூட்டணியை அறிவித்தனர். இந்நிலையில், பிரதமர் மோடி 2 நாள் பயணமாக கடந்த சனிக்கிழமை தூத்துக்குடி வந்தார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் வந்தார். தற்போது மீண்டும் இரண்டு நாள் பயணமாக மோடி தமிழகம் வருவதாக பாஜவினர் தெரிவித்துள்ளனர். அடுத்த மாதம் 26ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரம் வருகிறார்.

அங்கு மான்கிபாத் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பின்னர் 27ம் தேதி திருவண்ணாமலை சென்று சாதுக்களை சந்திக்கிறார். அப்போது அரசு நிலத்திட்டங்களையும் தொடங்கி வைக்கிறார். பல்வேறு அரசு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். அவரது வருகைக்கான ஏற்பாடுகளை ஒன்றிய அரசும், பாஜவினரும் செய்து வருகின்றனர். தேர்தல் நெருங்குவதால் மாதத்திற்கு ஒரு நிகழ்ச்சியாவது தமிழகத்தில் நடத்த வேண்டும் என்று ஒன்றிய அரசு அதிகாரிகளுக்கும் பாஜவுக்கும் மோடி உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அடுத்த மாதம் தமிழகத்திற்கு மோடி வந்தாலும், அதைத் தொடர்ந்தும் தேர்தல் முடியும் வரை மோடியும், அமித்ஷாவும் தமிழகத்திற்கு அடிக்கடி வருவார்கள் என்று கூறப்படுகிறது.

Advertisement