27 ஆண்டுக்கு பின் ஆட்சியை பிடித்த பாஜக : டெல்லி சட்டப்பேரவை கூடியது
Advertisement
இதில், முதல்கட்டமாக மக்களால் தேர்வு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் அரவிந்தர் சிங் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெறுகிறது. பாஜக சார்பில் எம்எல்ஏ விஜேந்தர் குப்தா பேரவைத் தலைவர் தேர்தலுக்கு நிறுத்தப்படுகிறார். மொத்தம் 70 உறுப்பினர்களில் பாஜகவுக்கு 48, ஆம் ஆத்மிக்கு 12 உறுப்பினர்கள் உள்ள நிலையில், விஜேந்தர் குப்தா ஒருமனதாக பேரவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்கட்சி தலைவராக ஆம்ஆத்மி கட்சியின் எம்எல்ஏவும், முன்னாள் முதல்வருமான அடிசி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு நேற்று அக்கட்சியின் தலைவர் கெஜரிவால் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டது.
Advertisement