தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாஜ ஆதரவு பேச்சு அதிமுக நிர்வாகியின் ஜமாஅத் பதவி பறிப்பு

Advertisement

கோவை: அதிமுக சிறுபான்மை பிரிவு இணைச்செயலாளராகவும், கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் பொதுச்செயலாளராகவும் இருந்தவர் கோவையை சேர்ந்த அப்துல் ஜப்பார். இவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற மே தின விழா பொதுக்கூட்டத்தில் பேசும்போது ‘‘நான் ஒரு இஸ்லாமியன். ஆனாலும் இந்த தேர்தலில் பாஜவுடன் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் கூறினேன்.

காரணம் முஸ்லிம்கள் அதிமுகவிற்கு ஓட்டுப்போடமாட்டார்கள். கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் பாஜவோடு இல்லை. நம்முடன் ஒரு முஸ்லிம் கட்சி இருந்தது. ஆனால் அந்தக்கட்சியும் சேர்ந்து திமுகவிற்கு ஓட்டு அளித்தது. அதனால் நாம் ஏன் பாஜவை பகைக்க வேண்டும்?’’ என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத்தின் ஆட்சி மன்றக் குழு அவசரக் கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஐக்கிய ஜமாஅத்தின் பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து அப்துல் ஜப்பார் நீக்கப்பட்டுள்ளார். அப்துல் ஜப்பாரின் பேச்சுக்கும், ஐக்கிய ஜமாஅத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை எனவும், அவரது பேச்சுக்கு ஐக்கிய ஜமாஅத் உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்ததால் அவரை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி உள்ளதாகவும் கோவை மாவட்ட ஐக்கிய ஜமாஅத் தெரிவித்துள்ளது.

Advertisement