தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தான் ஆளாத மாநில மக்களின் உழைப்பை சுரண்டும் பாஜ: செல்வபெருந்தகை சூடு

திருச்சி: திருச்சியில் நேற்று நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் மாநில தலைவர் செல்வபெருந்தகை பேசியதாவது: ஒன்றிய அரசு பாஜ ஆளாத மாநிலங்கள் கொடுக்கும் நிதியை, பாஜ ஆளும் மாநிலங்களுக்கு பிரித்து கொடுத்து விடுகிறது. தமிழ்நாடு உள்ளிட்ட பாஜ ஆளாத மாநில மக்களின் உழைப்பை சுரண்டுகிறது. 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வைத்தது போல், ஜி ராம் ஜி சட்டத்தை திரும்ப பெற வைப்போம். போலி அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது. பாஜ, ஆர்எஸ்எஸ்சுக்கு உகந்த மண் தமிழ் மண் அல்ல.

Advertisement

தமிழ்நாட்டை ஒரு போதும் மக்கள் தலைகுனிய விட மாட்டார்கள். தமிழ்நாட்டுக்கும், ஒன்றிய அரசுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் தமிழ்நாட்டை பட்ஜெட்டில் நிராகரித்துள்ளனர். இந்தியாவில் அரசமைப்பு சட்டத்தின்படி அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என காந்தி கூறியதால், ஆர்எஸ்எஸ்காரர்கள் அவரை கொலை செய்தனர் என்றார். முன்னதாக செல்வபெருந்தகை செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘திமுக கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. நாங்கள் சுமூகமாக தான் இருக்கிறோம். காங்கிரஸ் எத்தனை இடங்களில் போட்டியிடும் என்பதை அகில இந்திய தலைமை முடிவெடுக்கும்’’ என்றார்.

Advertisement

Related News