தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகார் அரசு மருந்துவமனையில் சடலத்தின் இடது கண் மாயம்: எலி கடித்ததாக மருத்துவர் அலட்சிய பதில்

Advertisement

பாட்னா: பீகார் அரசு மருந்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த சடலத்தின் இடது கண் மாயமானது. கண்ணை எலி கடித்திருக்கும் என்று மருத்துவர் கூறினார். பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த பன்துஷ் குமார் மர்ம ஆசாமிகளால் துப்பாக்கியால் கடந்த 15ம் தேதி சுடப்பட்டார். வயிற்றில் தோட்டா பாய்ந்த நிலையில் நாளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அன்றிரவே பன்துஷ் குமார் உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள், பன்துஷ் குமாரின் இடது கண் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மருத்துவமனை நிர்வாகத்தினர் பன்துஷ் குமாரின் கண்ணை அகற்றியதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.

இதுகுறித்து மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் பினோத் குமார் சிங் கூறுகையில், ‘இறந்த நபரின் கண் அகற்றப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த போது சடலத்தின் கண்ணை எலிகள் கடித்திருக்கலாம். இருந்தாலும் இதுகுறித்து விசாரித்து வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் உண்மையான காரணம் தெரியும்’ என்று அலட்சியமாக கூறினார். மருத்துவமனை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசாரும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement

Related News