தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பீகாரை போல் தமிழ்நாட்டிலும் வெல்வோம் எனக்கூற முடியாது: எதார்தத்தை பேசும் நயினார்

நெல்லை: ‘பீகாரில் பாஜ பெற்ற வெற்றியை வைத்து தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களிலும் அதே வெற்றி இருக்கும் என்று உறுதியாக சொல்லி விட முடியாது’ என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். நெல்லையில் பாஜ மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: பீகார் மக்கள் பாஜவுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் மீண்டும் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.

Advertisement

தொடர்ந்து, தமிழகத்தில் வரக்கூடிய 2026 தமிழக சட்டமன்ற தேர்தலிலும் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயமாக வெல்லும். தேர்தல் ஆணையத்தின் மீது வைக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்கிறீர்கள். தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை போன்றவை தனிப்பட்ட அமைப்புகள் ஆகும். தேர்தலில் ஜெயித்தால் தேர்தல் ஆணையம் சரியாக உள்ளது. தோற்றால் தவறாக உள்ளது என கூறுவது சந்தர்ப்பவாத அரசியல்.

தேர்தல் ஆணையம் பாஜவுடன் கூட்டணி வைத்திருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது. டெல்லியில் குண்டுவெடிப்பையும், தேர்தலையும் தொடர்புபடுத்தி பேசுவது தவறு. பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் பாஜக பெற்ற வெற்றியை வைத்து தமிழகம் உள்ளிட்ட வரவுள்ள 5 மாநில தேர்தலிலும் அதே நிலை இருக்கும் என்று உறுதியாக சொல்லிவிட முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

* ‘கேட்டதை செய்து தரும் முதல்வர் மு.க.ஸ்டாலின்’

‘நெல்லை தொகுதியில் என்னை தோற்கடிக்க வேண்டும் என திமுகவினருக்கு முதலமைச்சர் ஆர்டர் போட்டதாக கூறுகிறார்கள். எனக்கும், தமிழக முதல்வருக்கும் தனிப்பட்ட நட்பு உள்ளது. நான் நெல்லை தொகுதிக்காக கேட்ட கல்லூரி, பாலங்கள் போன்றவற்றை முதல்வர் செய்து தந்துள்ளார். இருந்தாலும், தேர்தலில் தனது கட்சி ஜெயிக்க வேண்டும் என்று அவர் நினைப்பது இயற்கைதான், அதில் தவறு இல்லை’ என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

Advertisement