Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

செய்தி மக்கள் தொடர்புத்துறையில் 2 வாகன ஓட்டுநர்கள். ஒரு வாகன சீராளருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்!!

சென்னை : தமிழ் வளர்ச்சி (ம) செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள இரண்டு வாகன ஓட்டுநர்கள். ஒரு வாகன சீராளர் என மூவருக்கும் தலைமைச் செயலகத்தில் இன்று (18.9.2024) பணி நியமன ஆணைகளை வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு நிறைவேற்றி வரும் திட்டங்கள். அறிவிப்புகள், அரசின் சாதனைகள், செய்தி வெளியீடுகள், அறிக்கைகள். வேண்டுகோள்கள் அனைத்தும் மக்களை எளிதில் சென்றடையும் வகையில் அரும்பணிகளைத் தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை மிகச் சிறப்பாக நிறைவேற்றி வருகிறது.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன் அவர்கள், செய்தி மக்கள் தொடர்புத் துறையில் காலியாக இருக்கும் திருப்பூர் மாவட்ட ஓட்டுநர் பணியிடத்திற்கு திரு.ஆனந்தன். திருப்பத்தூர் மாவட்ட ஓட்டுநர் பணியிடத்திற்கு திரு.எம். தமிழரசு ஆகியோரையும், மதுரை மாவட்டத்தில் வாகன சீராளர் பணியிடத்திற்குக் கருணை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள திருமதி.வெ.சித்ராதேவி அவர்களையும் பணி நியமனங்கள் செய்து உரிய ஆணைகளை தலைமைச் செயலகத்தில் இன்று (18.9.2024) நேரில் வழங்கி, வாழ்த்துகள் கூறியதுடன் சிறப்பாகவும் பொறுப்பாகவும் பணிபுரியுமாறும் அறிவுரைகள் வழங்கினார்.இந்நிகழ்வின்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் செயலாளர் வே.ராஜாராமன், இ.ஆ.ப.. அவர்கள் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மரு. இரா.வைத்திநாதன், இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் இயக்குநர்(செய்தி) திரு.எஸ்.செல்வராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.