Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காஷ்மீர் முதல் குஜராத் வரை பாக். எல்லையில் உள்ள 5 மாநிலங்களில் இன்று நடக்க இருந்த போர் ஒத்திகை பயிற்சி ஒத்திவைப்பு!!

புதுடெல்லி: காஷ்மீர் முதல் குஜராத் வரை பாக். எல்லையில் உள்ள 5 மாநிலங்களில் இன்று நடக்க இருந்த போர் ஒத்திகை பயிற்சி ஒத்திவைக்கப்பட்டது. காஷ்மீர் பஹல்காமில் 26 சுற்றுலாப்பயணிகளை சுட்டுக்கொன்றதற்கு பதிலடியாக மே 7ம் தேதி அதிகாலை 1 மணிக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் தீவிரவாத முகாம்களை இந்தியா தகர்த்தது. இதனால் இந்தியா,பாக். இடையே 4 நாட்கள் போர் நடந்தது. மே 7ஆம் தேதி நாடு முழுவதும் போர் ஒத்திகை பயிற்சியும் நடத்தப்பட்டது. இந்த சூழலில் காஷ்மீர் முதல் குஜராத் வரை பாக். எல்லையில் உள்ள 5 மாநிலங்களில் மீண்டும் இன்று போர் ஒத்திகை பயிற்சி நடத்த ஒன்றிய அரசு நேற்று திடீரென உத்தரவிட்டது.

பாக். எல்லையை ஒட்டியுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் அனைத்து மாவட்டங்களிலும், எதிரி விமானங்கள், டிரோன்கள், ஏவுகணைத் தாக்குதல்கள் உள்ளிட்ட வான்வழித் தாக்குதல்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து இன்று மாலை போர் ஒத்திகை பயிற்சி நடக்க இருந்தது. காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், அரியானா மற்றும் சண்டிகரில் இந்த பயிற்சி மேற்கொள்ளப்படும் என்று தீயணைப்பு சேவை மற்றும் ஊர்க்காவல்படை இயக்குநரகம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், தற்போது, நிர்வாக காரணங்களுக்காக இந்தப் போர் ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான், குஜராத் மற்றும் ஜம்மு காஷ்மீர் அரசுகள் தெரிவித்துள்ளன. மேலும், அடுத்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஜூன் 3ம் தேதி பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.