தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெங்களூருவில் கன்னட சினிமா இயக்குநர் குருபிரசாத் தற்கொலை

Advertisement

பெங்களூரு: கன்னட திரைப்பட இயக்குநரும் நடிகருமான குருபிரசாத் பெங்களூருவில் நேற்று தற்கொலை செய்துகொண்டார். கன்னட சினிமாவில் 2006ம் ஆண்டு மாதா என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் குருபிரசாத். அதன்பின்னர் எட்டேலு மஞ்சுநாதா, டைரக்டர்ஸ் ஸ்பெஷல், எரடனே சாலா, ரங்கநாயகா ஆகிய திரைப்படங்களை குருபிரசாத் இயக்கினார். படம் இயக்குவது உட்பட பல திரைப்படங்களில் நடிக்கவும் செய்துள்ளார்.

அண்மையில் 2வது திருமணம் செய்துகொண்ட குருபிரசாத்துக்கு வயது 52. இந்நிலையில், பெங்களூரு மதநாயக்கனஹள்ளியில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பெங்களூரு மதநாயக்கனஹள்ளி அப்பார்ட்மென்ட்டில் குருபிரசாத் வசித்துவந்த நிலையில், அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, குருபிரசாத் மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி இருந்தார்.

அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. அவர் தற்கொலை செய்து பல நாட்கள் ஆகியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். போலீசாரின் விசாரணையில் இயக்குநர் குருபிரசாத் கடும் நிதி நெருக்கடியில் இருந்தது தெரியவந்தது. அவரது பல படங்கள் முடிக்கப்படாமல் பாதியில் நிற்பதும் தெரியவந்திருக்கிறது. கடும் நிதி நெருக்கடியில் இருந்துவந்த இயக்குநர் குருபிரசாத்தின் இயக்கத்தில் வெளியான கடைசி படமான ரங்கநாயகா படமும் தோல்வியைச் சந்தித்ததால் அவர் மன அழுத்தத்திலும் இருந்துள்ளார்.

அண்மையில் 2வது திருமணம் செய்துகொண்ட குருபிரசாத், திரைப்படங்களை இயக்கியதுடன், ரியாலிட்டி ஷோவில் நடுவராகவும் இருந்துவந்தார். நிதி நெருக்கடி, மன அழுத்தம் ஆகிய பிரச்னையில் இருந்துவந்த குருபிரசாத் தற்கொலை செய்துகொண்டார். அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். குருபிரசாத் தற்கொலை செய்துகொண்ட வீட்டில் 8 மாதங்களாக வசித்துவந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மேலும், அவரது 2வது மனைவி பற்றியும் போலீசார் விசாரித்துவருகின்றனர்.

Advertisement