தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பெங்களூரு டூ பவானிசாகர் ரூ.2 கோடி கேட்டு காரில் சட்ட மாணவர் கடத்தல்: செக் போஸ்ட்டில் அதிரடியாக மீட்ட போலீஸ்

Advertisement

சத்தியமங்கலம்: பெங்களூருவில் ரூ.2 கோடி கேட்டு மிரட்டி காரில் கடத்தப்பட்ட சட்டக்கல்லூரி மாணவரை பவானிசாகர் அருகே சோதனை சாவடியில் போலீசார் மீட்டனர். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே பெரிய கள்ளிப்பட்டி காவல்துறை சோதனைசாவடியில் நேற்று முன்தினம் இரவு பவானிசாகர் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர் ஹரிஷ்குமார் பணியில் இருந்தார். நேற்று அதிகாலை 1.30 மணியளவில் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தபோது, சத்தியமங்கலத்தில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வேகமாக சென்ற காரை காவலர் ஹரிஷ்குமார் தடுத்து நிறுத்தி உள்ளார்.

அப்போது, காரில் இருந்த ஒரு நபர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்... என கூச்சல் போட்டுள்ளார். உடனே காவலர் ஹரிஷ்குமார் அவர் யார்? என விசாரித்தபோது காரில் உள்ளவர்கள் அந்த நபருக்கு பைத்தியம் எனக் கூறி, காரை நகர்த்த முயன்றனர்.

அப்போது, காவலர் ஹரிஷ்குமார் காருக்குள் இருந்த நபரை கையை பிடித்து இழுக்கவே அவர் காரில் இருந்து வெளியே வந்தார். இதையடுத்து காரில் இருந்த மற்ற 4 பேரும் காரை எடுத்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த நபரிடம் விசாரித்தபோது, அவர் கர்நாடக மாநிலம் பெங்களூரு ஹெப்பால் பகுதியைச் சேர்ந்த முத்து மகன் இஸ்ரவேல் (21) என்பதும், இவர் பெங்களூரு சட்டக் கல்லூரியில் எல்எல்பி 2ம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.

நேற்று முன்தினம் மதியம் பெங்களூருவில் இஸ்ரவேலை சந்தித்த 4 பேர் கும்பல் அவரது வீட்டை வாடகைக்கு எடுப்பதற்காக பார்க்க வந்துள்ளதாகவும், அதற்கு முன்பணம் கொடுக்க அருகில் உள்ள ஏடிஎம்மிற்கு அழைத்துச் செல்லுமாறு கூறியதை நம்பி காரில் ஏறியுள்ளார். ஆனால், அவர்கள் ஏடிஎம் செல்லாமல், நீ முத்துவின் பையன் தானே உன்னை வைத்து உன் அப்பாவிடம் ரூ.2 கோடி பணம் கேட்க வேண்டும் என மிரட்டி வாயைப் பொத்தி காரில் கடத்தி வந்துள்ளனர்.

பெரிய கள்ளிப்பட்டி சோதனை சாவடியில் போலீசார் காரை தடுத்து நிறுத்தியபோது, வாக்கி டாக்கி சத்தம் கேட்டதால், போலீஸ் இருப்பதை அறிந்து உடனே சுதாரித்து கொண்டு வாலிபர் காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டுள்ளார். இதைத்தொடர்ந்து காவலர் அவரை காப்பாற்றியுள்ளார். இந்த நிலையில் காரில் இருந்தவர்கள் 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க நபர்கள் எனவும், அவர்கள் மலையாளம் பேசியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து பவானிசாகர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement

Related News