தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தடையை மீறி பேரணி கிருஷ்ணசாமி உட்பட 689 பேர் மீது வழக்கு

Advertisement

சென்னை: தடையை மீறி பேரணி செல்ல முயன்ற விவகாரத்தில், புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி உட்பட 689 பேர் மீது எழும்பூர் போலீசார் 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். அருந்ததியர் உள் இட ஒதுக்கீடு அரசாணையை ரத்து செய்யவும், மஞ்சோலை மக்களின் வாழ்வாதாரத்தை மாஞ்சோலையிலேயே நிலை நாட்ட வேண்டும் என்பது உட்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதிய தமிழகம் கட்சி சார்பில் எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நேற்று முன்தினம் பேரணியாக செல்ல முயன்றனர்.

ஆனால் மழை காரணமாக பேரணி நடத்த காலத்தாமதம் ஆனது. இதனால் போலீசார் பேரணிக்கு திடீர் தடை விதித்தனர். பேரணியை தலைமை ஏற்று நடத்த வந்த புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் அவர், சாலையிலேயே படுத்து தனது கட்சியனருடன் மறியலிலும் ஈடுபட்டார். இதையடுத்து போலீசார் டாக்டர் கிருஷ்ணசாமி உட்பட அனைவரையும் குண்டு கட்டாக கைது செய்து பேருந்தில் ஏற்றினர்.

பிறகு அனைவரையும் கைது செய்து சமூதாய நல கூடங்களில் அடைத்து வைத்து பிறகு மாலை விடுவித்தனர். இதற்கிடையே போலீசாரின் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட புதிய தமிழக கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி உட்பட 689 பேர் மீது தடையை மீறி ஒன்று கூடுதல், அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தது உட்பட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement