தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

லெபனானின் பால்பெக் நகர மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு

Advertisement

ஜெருசலேம்: லெபனானின் பால்பெக் நகரில் வசிக்கும் மக்கள் அனைவரையும் வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.  பாலஸ்தீனம், லெபனான் நாடுகளில் செயல்பட்டு வரும் பயங்கரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அந்நாடுகளின் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இத் தாக்குதலில், பாலஸ்தீனத்தில் கடந்த ஓராண்டில் 43 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். லெபனானில் 2800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், லெபனானின் கிழக்கில் உள்ள பால்பெக் நகரில் உள்ள மக்கள் அனைவரையும் வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நகரை ஒட்டிய பல பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பண்டைய ரோமாபுரி காலத்து கோயில் ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

* ஐநா எச்சரிக்கை

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள அகதிகள் முகாம்களில் உள்ளோருக்கு உணவு மற்றும் மருந்து சப்ளை செய்வதை தடுக்கும் நோக்கில் ஐநா அமைப்புக்கு, இஸ்ரேல் தடை விதித்துள்ளதற்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த தடையை அகற்றாவிட்டால், சர்வதேச சட்டப்படி அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக, ஐநா கூறியுள்ளது.

 

Advertisement

Related News