தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அயோத்தியில் சரயு நதியில் படகில் இறைச்சி சாப்பிட்டு, மது அருந்திய 3 பேர் கைது!

அயோத்தி: அயோத்தியில் உள்ள சரயு நதியில் படகில் அமர்ந்து ஆட்டிறைச்சி சாப்பிட்டு, மது அருந்தியதாக மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அங்குள்ள குப்தார் காட் பகுதியில், நதியின் நடுவே ஒரு படகில் நான்கு பேர் இறைச்சி சாப்பிட்டு, மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதைத் தொடர்ந்தே போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

Advertisement

இதுகுறித்து நகர வட்டார காவல் அதிகாரி கூறுகையில், "வைரலான வீடியோவில் நான்கு இளைஞர்கள் ஆட்டிறைச்சி சாப்பிடுவதும், மது அருந்துவதும் தெரிந்தது. அவர்களில் மூன்று பேரை நாங்கள் கைது செய்துள்ளோம். தப்பியோடிய மற்றொருவரைத் தேடி வருகிறோம்" என்றார்.

கைது செய்யப்பட்டவர்கள் லவ்குஷ் நிஷாத், ஜிதேந்திர நிஷாத் மற்றும் ராஜ்குமார் நிஷாத் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். புனிதமாக கருதப்படும் சரயு நதியில் இவ்வாறு செய்ததன் மூலம், பக்தர்களின் மத உணர்வுகளையும் நம்பிக்கையையும் இவர்கள் புண்படுத்தியதாக போலீசார் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம், வாரணாசியில் உள்ள கங்கை நதியில் படகில் சிக்கன் சமைத்து, மது குடித்ததாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களின் படகும் பறிமுதல் செய்யப்பட்டு, 25 முதல் 32 வயதிற்குட்பட்ட அந்த ஐந்து பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதேபோல், கடந்த மார்ச் மாதம் கங்கை நதியில் படகு ஒன்றில் இப்தார் விருந்தின் போது சிக்கன் பிரியாணி சாப்பிட்டதாக 14 பேர் கைது செய்யப்பட்டனர். வழிபாட்டுத் தலத்தை அசுத்தப்படுத்துதல் மற்றும் மத உணர்வுகளைப் புண்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

Advertisement

Related News