அவிநாசி அருகே தம்பதி வெட்டிக்கொலை
Advertisement
பழனிச்சாமி குடும்பத்திற்கும், சின்னப்பெரியசாமி குடும்பத்திற்கும் இடையே ஆடு, மாடு, மற்றும் கோழிகள் வேலி தாண்டி மேய்ச்சலுக்காக வருவது குறித்து முன் விரோதம் இருந்துள்ளது. இதுதொடர்பாக ரமேஷ் அவர்களிடம் நேற்று முன்தினம் நீண்ட நேரம் சண்டை போட்டுவிட்டு சென்றுள்ளார். நள்ளிரவில் மது போதையில் பழனிச்சாமியின் வீடு புகுந்து தம்பதியை அரிவாளால் சரமாரி வெட்டி கொலை செய்துவிட்டு யாரோ கொலை செய்துவிட்டதாக நாடகமாடியுள்ளார். பின்னர் மொபட்டில் தப்பிச்சென்றபோது கீழே விழுந்து படுகாயத்துடன் அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.
Advertisement