தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அவிநாசி அருகே தம்பதி வெட்டிக்கொலை

Advertisement

அவிநாசி: திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகே துலுக்கமுத்தூர் ஊராட்சி ஊஞ்சப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (87). இவரது 2வது மனைவி பர்வதம் (75). தம்பதி இருவரும் அங்குள்ள தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று வீட்டில் பழனிச்சாமி, பர்வதம் ஆகிய இருவரும் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் பழனிச்சாமியின் பக்கத்து தோட்டத்தை சேர்ந்த அவரது உறவினரான சின்னப் பெரியசாமியின் (80) மூத்த மகன் ரமேஷ் (43)தான் இருவரையும் கொலை செய்தது என தெரியவந்தது.

பழனிச்சாமி குடும்பத்திற்கும், சின்னப்பெரியசாமி குடும்பத்திற்கும் இடையே ஆடு, மாடு, மற்றும் கோழிகள் வேலி தாண்டி மேய்ச்சலுக்காக வருவது குறித்து முன் விரோதம் இருந்துள்ளது. இதுதொடர்பாக ரமேஷ் அவர்களிடம் நேற்று முன்தினம் நீண்ட நேரம் சண்டை போட்டுவிட்டு சென்றுள்ளார். நள்ளிரவில் மது போதையில் பழனிச்சாமியின் வீடு புகுந்து தம்பதியை அரிவாளால் சரமாரி வெட்டி கொலை செய்துவிட்டு யாரோ கொலை செய்துவிட்டதாக நாடகமாடியுள்ளார். பின்னர் மொபட்டில் தப்பிச்சென்றபோது கீழே விழுந்து படுகாயத்துடன் அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் கைது செய்யப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement

Related News