தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சர்வதேச செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மாமனாரிடம் பணம் பறிக்க முயற்சி

Advertisement

சென்னை: சென்னை கோட்டூர்புரம் வெள்ளையன் தெருவை சேர்ந்தவர் ஆனந்த்(81). தொழிலதிபரான இவர், சர்வதேச செஸ் விளையாட்டு வீரர் விஸ்வநாதன் ஆனந்தனின் மாமனார் ஆவார். இவரை கடந்த 18ம் தேதி வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்ட மர்ம நபர், நான் கர்நாடகா மாநில போலீஸ் என்றும், உங்கள் ஆதார் எண் பயன்படுத்தி எடுக்கப்பட்ட வாடகை கார் ஒன்று பொதுமக்கள் கூட்டத்தில் சிக்கி விபத்து ஏற்படுத்திவிட்டதாகவும், இதனால் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறி பேசியுள்ளார். அதற்கு ஆனந்த் மாமனார் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இருந்த போதிலும், உங்கள் வங்கி உள்ளிட்ட விபரங்களை எனக்கு உடனே அளிக்க வேண்டும் என்று கூறி மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆனந்த் மாமனார், சம்பவம் குறித்து உறவினர்களிடம் தெரிவித்த போது, இது மோசடி நபர்களின் வேலை என தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து சென்னை பெருநகர கிழக்கு மண்டல சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் ஆனந்த் மாமனார் புகார் அளித்தார். அந்த புகாரின் படி சைபர் க்ரைம் போலீசார் கர்நாடகா காவல்துறை என வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்ட மர்ம நபரின் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News