தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

Advertisement

*கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கடத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம் மனைவி ரோகிணி(57). இவர் நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார். அப்போது திடீரென தன் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றிகொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை உடனடியாக தடுத்து நிறுத்தி, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரை கள்ளக்குறிச்சி உதவி ஆய்வாளர் கனகவள்ளி மற்றும் போலீசார், கள்ளக்குறிச்சி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ரோகிணி கூறுகையில், நமச்சிவாயபுரம் கிராமத்தை சேர்ந்த ஒருவர், தனக்கு அவசரமாக ரூ.19 லட்சம் பணம் கடனாக வேண்டும் என கேட்டார். வீடு மற்றும் நிலத்தை அடமானம் வைத்து பின்னர் பணத்தை திருப்பி தருவதாக அவர் கூறியதை நம்பி, வேறொருவரிடம் கடனாக ரூ.19 லட்சம் பெற்று கடந்த 2012 ம் ஆண்டு கொடுத்தேன். அந்த பணத்தை திரும்ப தருமாறு பலமுறை கேட்டும் இதுவரை தரவில்லை. எனக்கு கடன் கொடுத்த நபர்கள் என்னை தொந்தரவு செய்து வருகிறார்கள்.

இதனால் நான் மன உளைச்சலில் இருந்து வருகிறேன். இது சம்மந்தமாக விழுப்புரம் மாவட்ட பொருளாதார குற்றவியல் பிரிவு, கள்ளக்குறிச்சி எஸ்பி அலுவலகம் மற்றும் டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, என்றார். இதையடுத்து போலீசார், இதுபோன்று தற்கொலை முயற்சியில் ஈடுபட கூடாது, முறைப்படி மனு அளிக்கும்படி அறிவுரை கூறி, அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.இச்சம்பவத்தால் ஆட்சியர் அலுவலக பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement