தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சட்டமன்ற தேர்தலில் போட்டியில்லை: ஏ.சி.சண்முகம் அறிவிப்பு

Advertisement

வேலூர்: சட்டமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறினார். வேலூர் ஸ்ரீபுரம் பொற்கோயிலில் பாஜக தேசிய தலைவரும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சருமான ஜே.பி.நட்டா நேற்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உடனிருந்தார். பின்னர் ஏ.சி.சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:

வருகிற சட்டமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலும், டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையிலும் இந்த கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியை புதிய நீதிக்கட்சி வரவேற்கிறது. இது வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய நீதி கட்சி, பாஜ, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளது.

வேலூரில் போட்டியிடுவது குறித்து தேர்தலுக்கு முன்பாக தான் முடிவாகும். சட்டமன்ற தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். தமிழ்நாடு முழுவதும் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்வதால் போட்டியிடவில்லை. ஆனால், எங்கள் கட்சி சார்பில் வேலூர் மாவட்டத்தில் கண்டிப்பாக ஏதாவது ஒரு தொகுதியில் வேட்பாளர் போட்டியிடுவார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

Related News