தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப்; 18 ஆண்டுகளுக்கு பின் வரலாறு படைத்த இந்தியா: கொரியாவை வீழ்த்தி தங்கம் வென்றது

டாக்கா: ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் ஆடவர் ரீகர்வ் குழு போட்டியில் இந்திய வீரர்கள், பலம் வாய்ந்த தென் கொரியா அணியை வீழ்த்தி 18 ஆண்டுகளில் முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். வங்கதேசத் தலைநகர் டாக்காவில் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இந்தியா வில்வித்தை வீரர்கள் ஏற்கனவே காம்பவுண்டு பிரிவில் 3 தங்கம், 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ள நிலையில், ஆடவர் ரீகர்வ் குழு இறுதிப் போட்டி நேற்று நடந்தது.

Advertisement

அதில் இந்திய வீரர்கள் யாஷ்தீப் போகே, அடானு தாஸ், ராகுல் அடங்கிய குழு, பலம் வாய்ந்த தென் கொரியா குழுவை எதிர்த்து போட்டியிட்டது. தென் கொரியா அணியில், சியோ மிங்கி, கிம் இயாசன், ஜாங் ஜிஹோ ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். போட்டியின் துவக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய தென் கொரியா அணி, துவக்கத்தில் சிறப்பாக செயல்பட்டு 4-2 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றது. அதன் பின் அற்புதமாக செயல்பட்ட இந்திய வீரர்கள் போட்டியின் திசையை மாற்றி, 5-4 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றனர்.

இதன் மூலம் ரீகர்வ் ஆடவர் பிரிவில், 2007ம் ஆண்டுக்கு பின் முதல் முறையாக இந்தியா தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்த பிரிவில் தென் கொரியா, கடந்த 2009ம் ஆண்டு முதல் தொடர் வெற்றிகளை குவித்து ஆதிக்கம் செலுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வெற்றி பெற்ற இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் பானர்ஜி, கடந்த 2007ம் ஆண்டு நடந்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மூவர் அணியில் இடம்பெற்றிருந்தார்.

Advertisement

Related News