தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரியலூர் அருகே பயங்கரம் நாய் குறுக்கிட்டதால் லாரி கவிழ்ந்து 80 சிலிண்டர்கள் வெடித்து சிதறல்: எரிந்தபடி ரோட்டில் உருண்டு ஓடியதால் மக்கள் அலறல்

அரியலூர்: அரியலூர் அருகே நேற்று காலை காஸ் சிலிண்டர்கள் ஏற்றி சென்ற லாரி கவிழ்ந்ததில், சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. இதில், லாரி எரிந்து நாசமானது. ரோட்டில் சிலிண்டர்கள் எரிந்தபடி உருண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரை சேர்ந்தவர் கனகராஜ் (35). லாரி டிரைவரான இவர், அரியலூரில் உள்ள டீலருக்காக இனாம்குளத்தூர் குடோனில் இருந்து லாரியில் காஸ் நிரப்பப்பட்ட 100க்கும் மேற்பட்ட சிலிண்டர்களுடன் நேற்றுமுன்தினம் இரவு புறப்பட்டார்.

Advertisement

வழியில் கல்லகம் டோல்பிளாசா அருகே லாரியை நிறுத்தி விட்டு தூங்கியுள்ளார். விடிந்ததும் நேற்று அதிகாலை புறப்பட்டு, அரியலூர் மாவட்டம் வாரணாசி கிராமம் பிள்ளையார் கோயில் அருகே காலை 7.15 மணியளவில் வளைவில் திரும்பும் போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரி கவிழ்ந்ததும் அதில் இருந்த சிலிண்டர்கள் சாலையில் விழுந்து எரிந்தபடி உருண்டு ஓடியது. 80க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் லாரியிலும், சாலையிலும் ஒன்றின் பின் ஒன்றாக வெடித்து சிதறியதால் அந்த பகுதி முழுவதும் பெரும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

சிலிண்டர்கள் வெடித்த போது வெடிகுண்டு வெடித்தது போல் பயங்கர சத்தம் சுமார் 6 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு கேட்டதால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் பீதியடைந்தனர். இந்த விபத்தில் கனகராஜ் காயத்துடன் உயிர் தப்பினார். தகவலறிந்த அரியலூர் தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் வந்து முதலில் வெடிக்காத சிலிண்டர்களை கைப்பற்றி பாதுகாப்பாக வைத்து, 3 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். சம்பவம் நடந்த இடத்தில் தரையில் ஏற்பட்ட அதிர்வு காரணமாக அந்த பகுதியில் திருமானூரில் இருந்து அரியலூருக்கு செல்லும் குடிநீர் குழாய் வெடித்து தண்ணீர் மேலே எழும்பியதால் லாரியின் அருகில் கிடந்த சிலிண்டர்களை அந்த தண்ணீர் குளிர்வித்தது.

தகவலறிந்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, எஸ்.பி. விஸ்வேஸ் பாலசுப்பிரமணிய சாஸ்திரி ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டு சென்றனர். போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சாலையின் குறுக்கே நாய் ஒன்று ஓடி வந்ததால் திடீரென டிரைவர் பிரேக் போட்டதும், இதனால் நிலை தடுமாறிய லாரி தலைக்குப்புற கவிழ்ந்தததால் சிலிண்டர்கள் ஒன்றோடு ஒன்று உரசி வெடிக்க தொடங்கியதும் தெரிய வந்தது.

Advertisement